வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூப விளையாட்டு

நேற்று நான் FACEBOOK ல் கொடுத்த STATUS க்கு நண்பர்கள் இப்படி எழுதாதீங்க என்று பதிலும் , நேரிடையாகவே அதை எடுத்து விடும் படியும் கூறினார்கள் . " இந்த கேடுகெட்ட அரசுக்கு   ஒட்டு போட்டதை நினைத்து வெட்கபடுகிறேன்  "  என்பது நான் எழுதியது.

மேலும் சில நண்பர்கள் "  இத்தன நாள் எங்க  போய்  இருந்தீர்கள் ? ஒரு சினிமா விற்கு இப்படி குய்யோ முய்யோ என்று  கத்துவது என்று அவரவரது முகநூளில்  எழுதி உள்ளார்கள்.


நான் எழுதியதற்கு உந்துதல் முழுக்க முழுக்க  கமல் மற்றும் விஸ்வரூபம்  பட பிரச்சனை என்பதை ஒத்து கொள்கிறேன் .



இந்த அரசு ஏற்கனவே நூலகம், தலைமை  செயலகம் மாற்றம் என்ற போது சுத்த முட்டாள்தனமான காரியம் என்று அப்போதே இவரது செயல்கள் நியாயமான எதிர்ப்புகளை   சந்தித்தது.  எப்பொழுதும் பழி  வாங்கும்  அரசு என்று சொல்லும்போது ,எல்லாவற்றிகும் அரசு பழி  வாங்குமா ? என்று எதிர் கட்சிகள் தனது தவறுகளை மறைபதற்கே  கருதினேன். நில அபகரிப்பு, கிரானைட்   ஊழல் என்பது பழி  வாங்கும்  நடவடிக்கை , நாங்கள் சுத்தமானவர்கள் என்று சொன்னது கேலிக்குரியது என்று அனைவருக்கும்  தெரியும்.அது பழி  வாங்கும் நடவடிகயாகவே இருந்தாலும் அதை ஆதரிக்கவே மணம்  போகிறது.


நியாயமான நடவடிகைகளாக  தோணும்போது அப்போது எப்படி குரல் கொடுக்க முடியும்? இதே நூலக மாற்றத்திற்கு அனைவரும் எதிர்ப்பு  தெரிவித்தார்கள்.


இது எல்லாவற்றிலும் அரசியல சாயம் இருக்கிறது. அரசியல சம்பந்தபட்ட ஆட்கள் இருகிறார்கள் ஆனால் இந்த தடை  அரசியலுக்கு அப்பாற்பட்டது . அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு மனிதரை பலிகடாவாகும்போதுதான் எதிர்ப்புகள்  அதிகம் கிளம்புகின்றன. எல்லாரும் சும்மா இருந்தார்கள் என்றால்  அப்போது அரசியலவிளையாட்டுகள்  அதிகம் இருந்தன, மின்சார தடைக்கு  அனைவரும் அதிருப்தி  தெரிவித்தது உண்மை தானே.. ஏனெனில்  பொது மக்கள் மட்டுமே சம்பந்தபட்டு இருக்கிறார்கள்.

இப்போது ஒட்டுமொத்த  மக்களும் அல்லாமால், அரசியல் சார்ந்தும் இல்லாத  ஒரு தனி நபரை பழி  வாங்கும்போதுதான் அணைத்து குரல்களும் எழும்ப  செய்கின்றன. இப்படி FACEBOOK இல்  கூறிய அதே நண்பர்கள் மற்ற   பொது பிரச்சனைகள் வந்தபோது என்ன செய்தார்கள் ? இதே FACEBOOK இல்  கமெண்ட் அல்லது  STATUS  எழுதி பேசிகொண்டு இருந்தார்கள் அவ்வளவுதான்.. இதை தவிர என்ன செய்ய முடியும்? இதேதான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம்.

கமலின் பிரச்னையும்  அதுதான் ஆரம்பித்தில் பிரச்னை   எழுந்தபோது , இதை புரிந்துகொண்டவர்கள் வெறும் FACEBOOK கில் மட்டுமே உட்கார்ந்து கொண்டு இருந்தது   தவறாகி விட்டது . பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் ரோட்டில் இருகிறார்கள் , நியாயம் பேசுபவர்கள்  FACEBOOK  இல் இருகிறார்கள்.


திரும்ப விஸ்வரூப பிரச்சனைக்கு  வரும்போது ... ஒரு தனி மனிதன் அரசியல சார்பற்ற  மனிதனை பழி  வாங்கும்படி அரசு நடந்துகொள்வது  கேவலத்திலும் கேவலம். ( ஜெயா டிவியில் இது பற்றி செய்து வராதபோதும்  மேலும் ப.சிதம்பரம் புத்தக வெளயீட்டு விழா ,ஜெயா டிவிக்கு  படம் கொடுக்காத செய்திகள் என  அனைத்தையும்  கருத்தில் கொள்ளும்போது இது முழுக்க முழுக்க அரசு பின்னணி கொண்ட பிரச்னை  என்பது ஊர்ஜிதமான உண்மை ).


அரசுக்கு ஒட்டு போட்டது  கேவலம் என்று சொன்னது வெறும் முதலமைச்சரை மட்டும் சொல்லவில்லை. அணைத்து ஆளும்கட்சி உறுப்பினர்கள்  மற்றும் அரசு அதிகாரிகளும் சேர்த்தே அரசு என்று கூறுகிறேன். இது முதலமைச்சருக்கு மட்டுமே இருக்கும் தனிப்பட்ட விரோதமாக அல்லாமால் கட்சியில் உள்ள மற்றவர்களின் தூண்டுதலாக கூட இருக்கலாம் அனால் என்ன தூண்டுதல் இருந்தாலும், யார் முதலமைச்சரிடம்  தவறாக சித்தரித்து  இருந்தாலும்  , முதல்வர் எப்பொழுதும் அவர் நினைத்தை மட்டுமே அவருக்கு  சரி,தவறு  என்பதை மட்டுமே  செய்பவர் என்பதால்  இது அவரது சொந்த வெறுப்பு காரணமாக எடுக்க பட்ட முடிவே என்று தோன்றுகிறது.


உண்மையில் முஸ்லீம்களை அவமானபடுத்துவது, அவர்களை தீவிரவாதிகள் என்று கூறுவது கமலோ , அல்லது அவரது திரைப்படமோ அல்ல... அரசு தரப்பில் வாதாடும்போது .. இந்த படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு  சீர்குலையும்  என்று சொல்கிறார்கள். எப்படி சீர்குலையும் ? யாரால் ? என்று நேரடியா சொல்லவில்லை.  யாரை ? முஸ்லிம்களை தானே ? இதுவரை வேறு எந்த அமைப்போ  அல்லது சமுதாயமோ படத்திற்கு எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை.  சில முஸ்லீம்  அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன மொத்த முஸ்லிம்களும் கலவரத்தில்  ஈடுபடுவார்கள், என்று அரசுதான் அவர்களை  தீவிரவாதிகளாக கருதுவதும் அவர்களை  தூண்டிவிடுவதும்  போல் உள்ளது.


ஒரு தனிமனிதனை தனது சொந்த வெறுப்பு காரணமாக இவ்வளவு திட்டம்போட்டு , மற்ற சமூகத்தினரை  முட்டாள் ஆக்கி..  மேலும் பலரை  முட்டாளாகி . வன்முறைய தூண்டி கலவரம்  ஆனால்  கூட பரவில்லை,தான் நினைத்தது நடக்க எண்டும், தனக்கு பிடிக்காதது இருக்க கூடாது என்ற இந்த வீம்பு , பழிவாங்கும் எண்ணம் இருக்கும் நபர் எப்படி நாளை நாற்பது தொகுதிகளை பார்த்து வாக்கு  கேட்பார்.. ?  மத்திய அரசை கை பற்றலாம் என்று  இருக்கும் நப்பாசை எப்படி நிறைவேறும்?



 அரசியல் சம்பந்தமான பழி  வாங்கும் நடவடிக்கைகளுக்கு  நாங்கள் குரல் கொடுக்கவில்லை.. ஏதும் அறியாமல் அரசியலே வேண்டாம் இருக்கும் ஒரு நபரை குறி வைக்கும் போதுதான் அடி மக்கள் வரை கோபம் வருகிறது ? சாதாரண மனிதனுக்கு இப்படி ஒரு பிரச்னை  அரசு அதிகாரிகள் அவர்களது சொந்த வெறுப்பு காரணமாக  வந்தால் எப்படி எதிர் நோக்குவது ?

நல்ல வேலை கமல் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் கயவர்கள் வேண்டுமென்றே சில இடங்களில் கலவரத்தை தூண்டி உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக வழக்கை  மாற்றி இருப்பார்கள்.


இதை எழுதி கொண்டு இருக்கும்போதே ஜெயலலிதா படம் பற்றி அறிக்கை இட்டு இருக்கிறார்... நேற்று வரை சும்மா இருந்த அரசு நேற்று இரவு கருணாநிதி அறிக்கை  வந்த பிறகு அரசியலுக்காக வாய்  திறந்ததே தவிர... வேறு எதற்காகவும்  நோக்கத்திலும் வாய் திறக்க வில்லை.


நமக்கு கொண்டாட்டம் என்று கமலை வைத்து மற்ற அரசியல கட்சிகள்  ஆடுகின்றன வாயை மூடி கொண்டிருந்த DMDK  , திமுக அறிக்கைக்கு பிறகு தானும் அறிக்கை விட்டு இருக்கிறது .


தற்போது வந்து கொண்டு இருக்கும் செய்திகளை பார்க்கும்போது முதல்வர்  தனக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கூறி  வருகிறார் . 

மறுபடியும் அரசியல் சாயல்  வெளுக்க ஆரம்பித்து இருக்கிறது .. கருணாநிதி என்ற ஊசி குத்தியதால் மட்டுமே இவர் வெளிய வந்து இருக்கிறார். .. மீண்டும் அரசியலை அகற்ற மற்றொரு அரசியல் தேவை என்பது நிஜமாகிறது. எந்த நிகழ்வு நடந்தாலும் தனது செய்திகளில் ஒளிபரப்பும்  ஜெயா செய்திகள் ஏன் இதுவரை எதுவும் சொல்ல வில்லை? இன்று இரவில் இருந்து கண்டிப்பாக ஜெயா செய்திகளில் செய்திகள் வர ஆரம்பிக்கும்..  கமலின் ஆதரவு பெருகிய நிலையில். திமுக குத்தலில் , மத்திய அரசு , மற்ற மாநில அரசுகளின் கருத்தால், மக்களின் பேராதரவால்  ... இதுவரை தூங்கி எழுந்து இப்போது தான்  விழித்தது  போல் பேச ஆரம்பித்து இருக்கிறார்.


ஒருவன்  பரம்பரை திருடன் என்றால் இன்னொருவன் பழி  வாங்கும் திருடன் ஆகிறான்..


இது தனி மனிதனுகாக அவனது சுந்ததிரதுக்காக எழுதியது ... இப்ப மட்டும் ஏன் குரல் கொடுக்குறீங்க என்று  கேட்பவர்கள். இலங்கை பெண்களுக்கு கொடுமை நடந்தபோது  பரிதாப பட்டேன் அதனால் டெல்லி பெண்ணுக்கு நடக்கும்போது பரிதாப பட மாட்டேன்  என்று சொல்பவர்கள் போல் இருக்கிறது. ... 

அரசியல் விளையாட்டுக்கும் , மக்கள் மற்றும் தனி மனிதனுக்கு நடத்தப்படும் விளையாட்டுக்கும்  வித்தியாசம் இருக்கிறது.,


  நாட்டுக்காக நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்ன  கலைஞனின் விஸ்வரூபம்  விரைவில் வரும்.









 

2 கருத்துகள்:

Guna சொன்னது…

dot

பெயரில்லா சொன்னது…

[p]You may think it just a joke, but it may happens . Tiffany and co jewellery [url=http://www.distiffanyforsale.com]tiffany jewelry outlet[/url] is the most beautiful jewellery all over the world . 175th Anniversary garden bracelet and Tiffany Enchant earrings with Tanzanites

Tiffany Garden bracelet and Enchant earrings [url=http://www.distiffanyforsale.com]tiffany heart necklace[/url] with diamonds, tanzanites, and tsavorite garnets in platinum ? Photo: Tiffany & Co . It is very important to take note of the girth of [url=http://www.distiffanyforsale.com]tiffany outlet online[/url] the wrist so you will get the perfect fit . In 1858, after the war, Tiffany opened a London store, and moved its operations to New York隆炉s Fifth Avenue . The bottom is operate by Colonel Miles Quaritch, Stephen Lang (The males Who Stare At Goats), who is recognized as a difficult primary sea who eats bullets for breakfast . Tiffany (Tiffany) was founded soon designed a beam of white ribbon of blue box, as its famous landmark . A good deal [url=http://www.distiffanyforsale.com]tiffany outlet store[/url] much more youngsters are getting the frenetic pursuers associated with Tiffany . [url=http://www.distiffanyforsale.com]tiffany online[/url] S.[/p]