வியாழன், 5 ஜூன், 2014

எனதும் எனது சில நண்பர்களின் சாதியமும்

நம் நாட்டில் இன்னும் மத கலவரங்கள் ஆங்காங்கே இன்னும் வந்து கொண்டுதான்  இருக்கிறது.. ஊருக்குள் இன்னும் சாதி பிரச்சனைகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய படித்த தலைமுறையில் இது குறைந்தாலும் , அவரவர் பழக்க வழக்கங்களை வைத்து மற்றவர்கஆளிடம்  பழகும் முறையையும் ,அளவையும் அதற்கேற்றபடி வைத்து கொள்கிறார்கள் .

எண்பதுகள் ,தொன்னூறுகளில் அதிக அளவுகள் சாதி  , மத வேறுபாடுகள்  இருந்தாலும் தற்போது இது மிக குறைந்ததாகவே காணபடுகிறது . தற்போது 25 முதல் 35  வயது வரை உள்ள நான் கண்ட/பழகும் (நல்ல படிப்பறிவு உள்ளவர்களை மட்டும் கணக்கில் வைத்து ) அவர்களிடம் மதமும் , சாதியமும் எப்படி இருக்கிறது
  நிதர்சன உண்மையை பார்க்கும்போது , படித்தவர்களிடம் இன்னும் அடி மனதில் மதமும் ,சாதியம் தொடர்கிறது என்பதே உண்மை.
எனது மற்றும் நான் பழகும் மனிதர்களின் ஜாதி ,மத பார்வை ...


இன்னும் எனக்கு தெரிந்த இந்நாள் நண்பர்கள் , தன கூட பழகுபவர்களின் குணம் மற்றும் பழக்கவழக்கம் அவர்களின் பூர்வீக சாதியை பொறுத்தே!  என்று வாதிடுவார்கள். ( ஜாதியை அறவே  மறந்த  எனக்கும் இதில் உண்மை இருக்கிறது என்பது எனது கருத்து ).
 நன்கு படித்து , வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் என்  ஒருவர்  ( இவரது ஜாதி பிரிவினை மக்கள் பெருந்துறை, ஈரோடு , கோபி , திருப்பூர் பகுதிகளில் அதிகம் , திருமணத்தில் அதிக பணத்தை வரதட்சணையாக கொடுப்பதை பெருமையாக கூறி கொள்பவர்கள் ) , இவருக்கு நான் இந்த ஜாதியில் பிறந்தேன் என்று  பெருமை. "நான் ​​​​ .....டண்டா " என்று சொல்வதில் இவருக்கு பெருமை . தன் கூட பழகும் ஒரு நபர் இவரது ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்தற்கு , என் ஜாதியில் கை வச்சுடாண்டா என்று கூறியவர்.
எனது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் கிராமத்தில் இருந்தாலும் ஆசிரியராக பணி  புரிபவர்..( 25 - 35 வயது இல்லை என்றாலும் ஆசிரியர்   என்பதால் கணக்கில் சேர்த்து கொண்டேன்) இன்று வரை தனது விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் ST /SC  மக்களுக்கு இவர் "தொட்டாங்குச்சியில் தான் தண்ணீர் தருவார், குழந்தைகளை தொட அனுமதிக்க மாட்டார் , தன வீட்டு வாசலுக்கு மேல் நடக்க அனுமதி கிடையாது .

ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னையில் வேலை பார்க்கும்போது ஒவ்வரு வெள்ளி கிழமையும் பூஜை செய்வார்கள் .உடன் வேலை பார்த்த ஒரு நண்பர் அதில் கலந்துகொள்ள மாட்டார் காரணம் அவர் வேறு மதத்தை ( வெறுமனே பொய்கள் சொல்லி பரப்ப பட்ட மதம் ) சார்ந்தவர். அவர் கலந்து கொள்ளாதது அவரவர் விருப்பம். ஆனால் அதற்க்கு பிறகு பிரசாதமாக தரப்படும் வாழைபழத்தை ஒரு தின்பண்டமாக கூட மதித்து தொட கூட மாட்டார் . யாராவர்து கோயிலுக்கு சென்று பஞ்சமிரதாமோ ,லட்டோ கொடுத்தால் அதை தொடுவதை கூட  நினைக்கும் ஆள் இவர் .
( எந்த பிரசாதமாக இருந்தாலும்  வாங்கிகொள்ளும் , ,மகாபாரதம்  இராமாயணம் தொடர்களை விரும்பி பார்க்கும் இவர் சார்ந்த மதம் கொண்ட நண்பரும் எனக்கு உண்டு ).

இந்தியா , முக்கியமாக தமிழகத்தை பொறுத்த வரை மத  அடிபடையில் பெரும்பாலும் மூன்று  உண்டு.மதங்கள் தனது கடவுள்களை வழிபடும் முறையை வைத்தே பிரிக்கவும்/ படுகிறது.

. அதில் பெரும்பான்மையாக மக்களை கொண்ட மதம்  அதிகமாக மூட நம்பிக்கைகள்  கொண்டதாக கருதப்படும் மதம் . இவர்கள் தலையில் தேங்காய் உடைத்தும்,  நாக்கு , உடம்பு என்று வேல் குத்தியும் ,நெருப்பில் நடந்தும் தனது முட்டாள் தனத்தை காட்டி கொண்டு  இருக்கும்.

இன்னொரு மதம் , தனது மதத்தை வெறித்தனமாக  நேசிப்பவர்களாக சித்தரிக்க படும் மதம் . நாடு சுதந்திரம்  அடைந்த இருந்தே பிரச்சனைகளை ஆரம்பித்த மதமாக கருத பட்டது. திரைப்படங்களில் அதிகமாக தீவிரவாதிகளாக  பிரிவினர். அதற்கேற்றபடி குண்டு வெடிப்புகளில் சிக்கும் நபர்களின் பெயர்கள் இவர்களது மத பெயர்களாகவே இருக்கும் .

  மூன்றாவது  தனது மதத்தை எப்படியாவது பரப்பி எல்லா சமூகத்தினரையும் இழுக்க வேண்டும் என்று  நினைக்கும் மதம் . உலகத்திலேயே மதத்திற்கு/ மதம் பரப்புவதற்கு என்று channel அதிகம் வைத்து இருக்கும் ஒரே மதம். தமிழகத்தில் மதம் பரப்புவதற்கு என்று 3 channel  வைத்து இருக்கும் மதம். ஒரு முறை இதில் ஒரு அலைவரிசையை எதேச்சையாக பார்க்கும்போது  நேயர் விருப்ப பாடல் என்று தொலைபேசியில் பேசிக்கொண்டு .இருதார்கள். அட.. என்று பார்க்கும்போது பிறகு தான் தெரிந்தது  அது அந்த மத ஜப பாடல்கள், அந்த மத பாடல்கள் அடிகடி சீடீ காசட் களில் வரும் , அந்த பாடல்களை மட்டும் அந்த அலைவரிசையின்  கேட்கிறார்கள் என்று . உண்மையில் இந்த மதத்தினர்  இல்லை . எப்படி இவர்கள் உருவானார்கள் என்று "பரதேசி" படத்தில் பாலா காட்டி இருப்பார். இன்றளவு  மூடநம்பிக்கைகள் அதிகம் கொண்ட மதத்தில் ஜாதிகள் அதிகம் இருப்பதால் , அதில் கடைசி வகுப்பு ஜாதியனர் , தன்னை தனது வகுப்பை வெளிபடுத்த தயங்குவதை தவிர்பதற்காக இந்த "பரப்பும்" மதத்தில் தன்னை இணைத்து கொள்கிறார்கள் . இதை இந்த "பரப்பும்" மதமும் நன்றாகவே பயன்படுத்தி கொள்கிறது .
உண்மையில் அடிப்படையிலேயே இந்த மதத்தில் பிறந்தவர்கள் ( பெரும்பாலும் வெளிநாட்டவர்கள்) காட்டும் மத பற்றை விட , இந்த மதத்திற்கு காட்டுவது  பற்று அதிகம் என்று சொல்வதை விட இவர்கள் காட்டுவது வெறும் முட்டாள்தனமும் , பிதற்றல் எனவும் , கீழ்த்தரமான மூளைச்சலவை என்றே தோணுகிறது .
(பெருமன்பமையான மனிதரை இது குறிக்கும் ,சிலரை இது குறிக்காது ).

 
 
அடுத்த தலைமுறையில் ஜாதி, மதம் போகுமா ? 
ஒவ்வாரும் மதமும் ,ஜாதியும் அதன் சங்கங்களும் தலைவர்களும்  தனகென்று தன மத பெயரில் ஜாதி,மதம் இல்லை என்று  சொல்லி கொடுக்கும் பள்ளிகள் ,கல்லூரிகளை நடத்தும்போது கண்டிப்பாக எதுவும் மாறாது .






கருத்துகள் இல்லை: